உன்னாவ் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேம் உன்னாவ் கிராமத்தை சேர்ந்த பெண் ஓருவரை, பா.ஜ எம்எல்ஏ குல்தீப் சிங் சிங்கார் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் உன்னாவ் பெண் மற்றும் அவரது வக்கீல் சென்ற கார் மீது கடந்த மாதம் லாரி மோதியது. இதில் உன்னாவ் பெண்ணின் அத்தைகள் இருவர் பலியாயினர். இந்த விபத்து கொலை சதி என கூறப்பட்டதால், சிபிஐ 2 வாரத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், உன்னாவ் பெண் மற்றும் அவரது வக்கீல் ஆகியோர் வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் சிபிஐ கோரிக்கையை  ஏற்று அடுத்த மாதம் 6ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

Related Stories: