சென்னை: ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண் வியாபாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு பகுதியில் சிலர் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக மெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மெரியமேடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹஜ் கமிட்டி கட்டிடம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஆட்டோவை மறித்து, அதில் வந்த 4 பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது, சிறு சிறு பொட்டலங்களாக 2 கிலோ கஞ்சா மற்றும் 2.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.