மத்திய தகவல் ஆணையத்தின் உரிமைகள் மாற்றப்படுகிறது : சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி : தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடையூறாக பார்ப்பதால் அதன் சுதந்திரத்தை பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆர்டிஐ திருத்த மசோதாவின் படி, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு நிகராக இருந்த மத்திய தகவல் ஆணையத்தின் உரிமைகள் மாற்றப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் மக்களவையில் உள்ள பெரும்பான்மை மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய அரசு முயல்கிறது. ஆனால் அது மக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: