வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி

ஹாபூர்,: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். உபியில்  புலந்த்சாகர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு  சாலேபூர் கோட்லா கிராமத்துக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். இந்த வேன்  ஹாபூர் மாவட்டத்தின் சாதிக்பூர் கிராமத்தை நேற்று முன்தினம் இரவு 11  மணியளவில் கடந்தபோது, எதிரே வேகமாக வந்த மினி லாரி வேன் மீது பயங்கரமாக  மோதியது. இதில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட, 8 குழந்தைகள் உள்பட 9 பேர்  உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: