புவனேஸ்வர்: நகர்ப்புறங்களில் காற்று மாசுபாடால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடை சரிசெய்ய எலெக்ட்ரிக் பேருந்துகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரபோவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ஒடிசாவில் கோயில் நகரம் என்றழைக்கப்படும் பூரி மற்றும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படக்கூடிய புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் பொதுப் போக்குவரத்துக்காக எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.