சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவு குறித்த இன்னும் பல அறிய தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்று மோடி கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: