புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விசா காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவர் சுவீடன் குடியுரிமை பெற்றவர். பல்வேறு புத்தகங்கள் எழுதி சர்ச்சையில் சிக்கிய இவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கடந்த 2004ம் ஆண்டு முதல் விசா பெற்று இந்தியாவில் தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் தனது விசாவை நீட்டிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘எனது விசா காலத்தை நீட்டித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் 5 ஆண்டுகளுக்கு எனது விசாவை நீட்டிக்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால், அது 3 மாதங்கக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது.