அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசம் : அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்ட்ர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது.  5.6 ரிக்ட்ர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் கிழக்கு காமயம் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 10கீ.மி ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் ஹிட்டா நகர், அசாம் மாநிலம் கௌகாத்தி, நாகலாந்து மாநிலம் திமாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாகவும்  தெரிவிக்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து அடுத்து 3.8 , 4.9  மற்றும் 5.5 ரிக்ட்ர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Related Stories: