லக்னோ: ‘சட்டப்பேரவை வளாகத்தில் குடிநீர் தேவைப்படுவோருக்கு அரை கிளாஸ் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்,’ என உத்தர பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் அதிகளவு குடிதண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்க, தண்ணீர் சிச்கனத்தை கடைப்பிடிக்கும்படி பேரவை தலைவர் ஹரிடே நரேன் தீக்ஷித் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் பிரதீப் துபே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டப்பேரவை வளாகத்தில் குடிக்க தரப்படும் தண்ணீரில் பாதியை மட்டுமே குடித்து விட்டு மீதி தண்ணீரை ஊழியர்களும், மக்களும் வீணாக்குகின்றனர். இதை தடுக்க, இனிமேல் தண்ணீர் தேவைப்படுவோருக்கு அரை கிளாஸ் தண்ணீர் மட்டுமே தரப்படும்.