சென்னைக்கு இணையான கட்டமைப்புகளுடன் செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: தமுமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் செ.ஹைதர் அலி வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி என தனி மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் வெளியிட்ட அறிவிப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அறிவிப்பு. தமிழகத்தின் 34 மற்றும் 35வது மாவட்டங்களாக உருவாக உள்ள இந்த நிர்வாக மாவட்டங்களின் உருவாக்கம்  நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மக்கள் நெருக்கத்தால் திணறி வரும் சென்னையின் அருகாமையில் அமைய உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கு இணையாக கட்டமைப்புகள் மும்பையில் புதிய மும்பை (நவி மும்பை) அமைக்கப்பட்டது போல் அமைக்கப்பட வேண்டும். மேலும் தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் கிடைக்கும் எலுமிச்சை, மா போன்ற பழ வகைகளை பதப்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு தேவையான சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: