திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று, நாளை 28 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது. அன்னதான கூடமும் மூடப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் ‘ஆனிவார ஆஸ்தானம்’ நடைபெற உள்ளது. இதனால் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயில் சுத்தப்படுத்தும் பணி இன்று காலை 6 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். எனவே அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரை என மொத்தம் 9 மணிநேரம் பக்தர்களுக்கு அனுமதியில்லை. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உட்பட சேவைகள் நடந்தாலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.