வீடு வாங்கி தருவதாக 11 லட்சம் மோசடி: வழக்கறிஞர் கைது

அம்பத்தூர்: ஆவடி அடுத்த அயப்பாக்கம், சிவசக்தி நகர், கவரை தெருவை சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (51). கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக்கை சேர்ந்த வழக்கறிஞர் சுசில்  ராஜ்குமார் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டும்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கிருஷ்ணமூர்த்தியிடம் ₹7 லட்சம் முன் தொகையாக சுசில் ராஜ்குமார் பெற்றுள்ளார். இதேபோல், வழக்கறிஞர் மதியரசன்  என்பவரிடமும் ₹4 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை இருவருக்கும் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும், அந்த ஆணையை எடுத்துக்கொண்டு திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்துள்ளனர்.  அப்போதுதான், சுசில் ராஜ்குமார் கொடுத்த ஒதுக்கீட்டு ஆணை போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் சுசில் ராஜ்குமாரை கைது செய்தனர்.

Related Stories: