அம்பத்தூர்: ஆவடி அடுத்த அயப்பாக்கம், சிவசக்தி நகர், கவரை தெருவை சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (51). கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக்கை சேர்ந்த வழக்கறிஞர் சுசில் ராஜ்குமார் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கிருஷ்ணமூர்த்தியிடம் ₹7 லட்சம் முன் தொகையாக சுசில் ராஜ்குமார் பெற்றுள்ளார். இதேபோல், வழக்கறிஞர் மதியரசன் என்பவரிடமும் ₹4 லட்சம் பெற்றுள்ளார்.