சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை மீது தமிழக அரசின் கருத்தை இரண்டு நாட்களில் பிரதமருக்கு, கடிதம் மூலம் தமிழக முதல்வர் தெரிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிப்பவர்களுக்கு மடிக் கணினிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2017-2018, 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்க அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மா ணவர்களுக்கு முதற்கட்டமாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு உள்ளாக மடிக்கணினிகள் வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக புகார் வந்துள்ளது.