அந்தேரி: செய்தி தொலைக்காட்சி நிருபரை தாக்கிவிட்டு அவருடைய செல்போனை பறித்ததாக நடிகர் சல்மான் கான் மீது மும்பையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட நிருபரின் வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றை சேர்ந்த நிருபர் அசோக் பாண்டே. ஏப்ரல் 24ம் தேதி இவர் மும்பையின் ஜூகுவில் இருந்து காந்திவலிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்ற நடிகர் சல்மான் கானை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கான் அவரை தாக்கியதோடு, செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.