புல்வாமா: காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர்-பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் தீவிராதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, ராஷ்டிரிய ரைஃபிள் படையின் 42வது பிரிவை சேர்ந்த வீரர்கள், சிறப்பு தேடுதல் குழுவுடன் இணைந்து ட்ரால் பகுதியில் உள்ள பிரான்பத்ரி வனப்பகுதியை சுற்றிவளைத்து, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தங்கள் பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்ததை கண்ட பயங்கரவாதிகள், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சி.ஆர்.பி.எஃப் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.