ஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளி என்பது அதிசயங்களைப் போலவே ஆச்சரியங்களும் நிறைந்தது. ஆகையால்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புபவர்களை நாசா முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் இருக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக உடல் எடை இல்லாதது போன்று தோன்றுவதால் அவர்களின் தசை மண்டலம் வலுவிழக்கும். மேலும் ஒரே அறையில் ஒரே நபருடன் பல நாட்கள் வேலை செய்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் மன அழுத்தம், தனிமையுணர்வு இது எல்லாவற்றையும் விட காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சாலும் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

இச்சூழலில், விண்வெளிக்கு சென்று பூமிக்குத் திரும்பிய 11 ரஷ்ய வானியலாளர்களை ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவந்தனர். சில மாதங்கள் விண்வெளியில் தங்கி வந்தவர்களுக்கு ஆறு சதவீதம் மூளையின் பகுதிகள் மாற்றம் கண்டுள்ள உண்மை இவ்வாய்வில் தெரியவந்துள்ளது. இத்தன்மையால் பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பி.என்.ஏ.எஸ். என்ற இதழில் வெளியான அறிக்கையில், மண்டையோட்டில் மூளை மிதக்கும் திரவத்தின் அளவு அதிகரித்துள்ளதாக உறுதி  செய்யப்பட்டுள்ளது. மூளையின் வென்ட்ரிகல் பகுதி அதிகரித்துள்ளதால், திரவத்தின் அளவும் அதிகரித்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Related Stories: