மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அமமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விருதுநகர் தெற்கு மாவட்டம், அமமுக கட்சியைச் சேர்ந்த மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் டாக்டர்  ஏ.ஏ.எஸ்.ஷ்யாம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.ஏ.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் அமமுக கட்சியை சேர்ந்த 12வது வார்டு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தி.கணபதி திருமலைக்குமார், 10வது வார்டு நகர்மன்ற  முன்னாள் உறுப்பினர் வி.முருகன், மாவட்ட நெசவாளர் அணி இணைச் செயலாளர் ஆர்.கதிரேசன், நகர மீனவர் அணிச் செயலாளர் வி.வேலுமணி, மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் வி.பி.துரை கற்பகராஜ் மற்றும் 25க்கு மேற்பட்ட அமமுக  நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

 அப்போது விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன்,  ராஜபாளையம் நகரச் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: