வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரம் பணிகள் தோய்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரண்டு வாரங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சென்னை குடிநீர் வாரியம், வேலூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மற்றும் நகர பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஓரிரு நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது.