ஐதராபாத்; தெலங்கானாவில் ரூ.80 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள காலேஸ்வரம் பல அடுக்கு நீர்பாசன திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கும் கோதாவரி ஆறு, தெலங்கானா வழியாக பாய்ந்து ஆந்திரா அருகே கடலில் கலக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவின் ஜெயசங்கர் - பூபால்பல்லி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா பகுதியில் காலேஸ்வரம் நீர்பாசன திட்டம் கட்டப்பட்டு வந்தது. ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த இந்த திட்டத்தின் கட்டுமான பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.