சோச்சி: ‘‘நீதித்துறையின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்’’ என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசி உள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் எஸ்சிஓ அமைப்பின் தலைமை நீதிபதிகள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பங்கேற்று பேசியதாவது:அரசியலமைப்பை பாதுகாத்து நீதியை நிலைநாட்ட நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போது உலகம் முழுவதும் அதிகாரம் படைத்த ஆதிக்க சக்திகள் எழுச்சி அடைந்து வருகின்றன.