காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே செட்டிகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (75). இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவூரில் கடந்த 8 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருள்பிரகாசம் (37). மேலபூவிழந்தநல்லூர் கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி கேரளாவில் ராமலிங்கத்தை பாம்பு கடித்ததாக அவரது மகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 16ம் தேதி அருள்பிரகாசம் கேரளா சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தை ராமலிங்கத்தை மேலபூவிழந்தநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்தார்.