சென்னை: தமிழக உரிமைகளை முதலமைச்சர் டெல்லியில் அடகுவைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முனைப்புடன் எதிரொலிக்க தவறவிட்டார். மேலும் தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.