ரவுடி கொலை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ் (24). ரவுடியான இவர், கஞ்சா போதைக்கு அடிமையானவர். தினேஷ் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த மாதம் 27ம் தேதி புதுவண்ணாரபேட்டை அம்மணியம்மன் தோட்டம் வழியாக நடந்து சென்றபோது, 10 பேர் கும்பல் இவரை வெட்டி கொன்றது.

புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கடற்கரை சாலையை சேர்ந்த சந்தோஷ் (19) என்பவர் நேற்று, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: