பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் தொடர்ந்து 2வது ஆண்டாக தகுதி பெற்றார். ரோலண்ட் கேரோசில் நேற்று முன்தினம் தொடங்கிய பரபரப்பான 2வது அரை இறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் - டொமினிக் தீம் (4வது ரேங்க்) மோதினர். முதல் செட்டில் அதிரடியாக விளையாடி ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த தீம் 6-2 என வென்று முன்னிலை பெற்றாஎ. இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜோகோவிச் 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது, மூன்றாவது செட்டில் டொமினிக் தீம் 3-1 என முன்னிலை வகித்தபோது புழுதிப் புயல் மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்து நடந்த இப்போட்டியில் 7-5 என 3வது செட்டை கைப்பற்றிய தீம் மீண்டும் முன்னிலை பெற்றார். எனினும், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-5 என 4வது செட்டை ஜோகோவிச் வசப்படுத்து 2-2 என சமநிலை ஏற்பட்டது.