நாமக்கல்: தன்னிச்சையாக அமைச்சர் மணிகண்டன் செயல்படுவதால், கடந்த ஓராண்டுகளாக என்னால் எனது தொகுதிக்குள் செல்ல முடியவில்லை.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் கூறுவேன் என எம்எல்ஏ கருணாஸ், நாமக்கல்லில் நேற்று தெரிவித்தார்.நடிகர் கருணாஸ் எம்எல்ஏ நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக எனது சொந்த தொகுதியான திருவாடானைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம். அவர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுகிறார். தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்குகூட எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை. அமைச்சரின் பேச்சை கேட்டுக்கொண்டு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதனால் வாக்களித்த எனது தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லை.