திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனை கடப்பாறையால் குத்திக்கொல்ல முயன்ற முதியவருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். கடந்த 2018 அக்டோபர் 5ம் தேதி இவர் எர்ணாகுளம் ரயில்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொச்சி தோப்பம்படியை சேர்ந்த ஜோசப் (75) என்பவர் திடீரென கடப்பாறையால் குஞ்சாக்சோ போபனை குத்தி கொல்ல முயன்றார்.