மாங்கனி மாவட்டத்தின் ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மொத்தமும், ஒரு ஹெட்கான்ஸ்டபிளின் கன்ட்ரோலில் தான் இயங்குகிறதாம். பாவப்பட்ட மக்கள், தங்கள் குறைகளை முறையிட வந்தால் கூட, இந்த தனிப்பிரிவு ஹெட் கான்ஸ்டபிளை தாண்டி, எஸ்.ஐ.,யை கூட பார்க்க முடியாதாம். இவரது நடவடிக்கையை பார்த்து, தேர்தல் காலத்தில் இட மாறுதல் பெற்று வந்த இன்ஸ்பெக்டரே அதிர்ந்து போய்விட்டாராம். வழக்கு விசாரணையில் அதிகம் மூக்கை நுழைப்பதோடு, அவரே பஞ்சாயத்து பேசி அனுப்புவதும் ஸ்ேடஷன் போலீசாரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். அப்புறம் சந்துக்கடை, சீட்டாட்டம், செம்மண் கடத்தல் என்று அனைத்துக்கும் ரேட்டு பேசுவதும் இவர் தானாம். இந்த வகையில் மட்டும் மாதத்துக்கு 2லட்சம் கல்லா கட்டுறாராம்.