சென்னை: பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக் கருத்து வெளியிட்டதாக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக இளைஞர் அணி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளராக இருந்து வரும் பேராசிரியர் சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தை படிக்க நேரிட்டது. அதில் அவர், “ஜனநாயக முறைப்படியே மோடியை துடைத்தெறிய எண்ணுகிறோம். முடியாதென்றால் வரலாறு காட்டும் வழியை தயங்காது தேர்வு செய்வோம்” என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு லெனின் என்ற மணவாளன் என்ன வழி தோழர் என்று பதிவிடுகிறார். அதற்கு சுந்தரவள்ளி, “ஆயுதம் தான்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.