ஐதராபாத்: ‘உங்கள் காலடியில் 16 எம்பி.க்களின் வெற்றியை சமர்பிப்போம்’ என்று சூளுரைத்து விட்டு சென்ற மூத்த அமைச்சர்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ‘செம டோஸ்’ விட்டார். 2 அமைச்சர்கள் பதவி பறிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா மாநில சட்டசபைக்கு தேர்தலை நடத்தி வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானவர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்). பின்னர், மக்களவை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தினார். தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் (டிஆர்எஸ்) குரல்தான் டெல்லியில் ஒலிக்க வேண்டும்; மோடியே தன்னை கூப்பிட வேண்டும் என்று மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருந்த அவர் நினைப்பிலும் மண்ணை போட்டது பாஜ.வின் பிரமாண்ட வெற்றி. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் 9 இடங்களை மட்டுமே டிஆர்எஸ்.சால் பெற முடிந்தது. பாஜ.வுக்கு 4, காங்கிரசுக்கு 3 இடங்கள் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது.