இடாநகர்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், அருணாச்சலில் உள்ள தாபோரிஜோ, தும்போரிஜோ, ராகா பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமானது. இதன் முழு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பாஜ 2 இடங்களில் வென்றதைத் தொடர்ந்து அக்கட்சி வென்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இதையடுத்து, இங்கு பாஜ தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது. ஐக்கிய ஜனதா தளம் 7, தேசிய மக்கள் கட்சி 5, காங்கிரஸ் 4, அருணாச்சல் மக்கள் கட்சி 1, சுயேச்சை 2, மற்றவை 10 தொகுதிகளிலும் வென்றுள்ளன.