ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் கீழ்தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக இப்பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தற்போது கிடைக்காததால் விவசாய நிலங்களிலும், அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்றும் குடிநீரை எடுத்து வருகின்றனர்.