டெல்லி : டெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; பிரவீன் கெல்லாட் நவாடா பகுதியில் வசித்து வருகிறார். விகாஸ் தலால் மீது டெல்லி மற்றும் ஹரியானா காவல் நிலையத்தில் பல கொலை முயற்சி வழக்குகள்,பணம் பறித்தல் மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இருவரும் டெல்லியின் பரபரப்பான துவாரகா மோர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 4 மணிக்கு சொத்து பிரச்னை காரணமாக மாறி மாறி 15 முறைக்கும் மேல் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.