தானே: திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கஞ்சர்பாத் வகுப்பினரிடையே விநோத வழக்கம் இருந்து வருகிறது. அதன்படி புதிதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன்பு தனது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும். இந்த வகுப்பை சேர்ந்த இளைஞர்கள் இந்த வழக்கத்தை எதிர்த்து ஆன்லைன் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினர் இது தொடர்பாக புகார் செய்ததன் பேரில், தானே போலீசார் அம்பர்நாத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.