மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு சிபிஐ, ஈடி பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனுவிற்கு சிபிஐ, ஈடி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, தற்போது வரையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக மணீஷ் சிசோடியா தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் சிசோடியா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, அடுத்த விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

The post மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு சிபிஐ, ஈடி பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: