சென்னை, மே 16: திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய ‘பொய் சொல்ல கூடாது பாப்பா’ என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, காணாமல் போன பாஜ தலைவர் தமிழிசை, அதிமுகவின் நிர்ப்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியிலும் திமுகவின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க பரபரப்பு செய்திகளையும், கருத்துக்களையும் கூறி வருவது வாடிக்கையாகி விட்டது.