மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. மீண்டும் பாஜ ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மோடி டெல்லியில் உள்ள விஜயசவுக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாரா? என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்தார்.கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம், சிஞ்சோளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:நாட்டின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் பிரதமர் மோடி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். நாடு சுதந்திரம் பெற்றபோது, மோடி இந்த மண்ணில் பிறக்கவில்லை. அவருக்கு என்ன தெரியும் காங்கிரஸ் கட்சியின் வரலாறு? இந்த நாட்டை கட்டி அமைத்தது காங்கிரஸ், நாங்கள் கட்டிய வீட்டில் குடிபுகுந்து எங்களை பார்த்து பேசி வருகிறார்.