சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் 34 பேர் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது எல்லையைத் தாண்டி வந்ததாக பாகிஸ்தான் கடற்படையினர் 34 மீனவர்களை கைது செய்து சென்று நீதிமன்றக் காவலில் அடைத்திருப்பதும், அவர்களின் 6 படகுகளை பறிமுதல் செய்து சென்றதும் ஏற்புடையதல்ல. எனவே, மத்திய அரசு பாகிஸ்தானோடு தொடர்பு கொண்டு நமது மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல இனிமேல் இந்திய மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டினால் அவர்களை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதையும் மத்திய அரசு அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்.