பென்னாகரம்: கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை கோயில் பகுதியில், அமாவாசை தினங்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இன்று(4ம் தேதி) அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் புனித நீராடும் வகையில், நேற்று கர்நாடகா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, ேநற்று காலை 10மணி நிலவரப்படி 1,500 கன அடியாக அதிகரித்தது.