மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர் உட்பட 80 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டி முடிந்ததும் ரஸ்ஸலிடம் அவரது மனைவி ஜாஸிம் லோரா பேட்டி எடுத்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி எனது அழகான மனைவியைக் கவர வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று ரஸ்ஸல் சிரித்தபடியே கூற, கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய லோரா, நான் உங்களின் அதிர்ஷ்ட நட்சத்திரமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரஸ்ஸல், ஆம் அதில் என்ன சந்தேகம் என்று கூறியதுடன் கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.