புதுச்சேரி : வங்கக்கடலில் புயல் உருவாகும் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளர், மாவட்டஆட்சியர், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். புதுவை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் புயலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.