‘மோடி தற்பெருமையை கேட்டு, கேட்டு டயர்டு ஆயிட்டேன்டா சாமீ...’

பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசும் தற்பெருமையை கேட்டு, கேட்டு  சோர்ந்து விட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், “பாகிஸ்தானுக்கு என்ன செய்தார் என்பதை பற்றி பிரதமர் பேசும் தற்பெருமையை கேட்டு கேட்டு நான் சோர்வடைந்துவிட்டேன்.

தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு முன்னர் மக்கள் பற்றிய முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவாரா? தனது கட்சியின் மூத்த தலைவர்கள் பேசிய வெறுப்பான பேச்சுக்கள் பற்றி பிரதமர் பேசுவதை கேட்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சிறு, குறு விவசாயிகளின் அவலநிலை குறித்தும் பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” என்று அடுத்தடுத்த டிவீட்களாக பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: