நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு  தெரிவித்துள்ளார்.மேலும் மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார் என்றும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்; அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாஹு  கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: