திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது ஆழமாக தோண்டப்பட்டு வந்த கிணற்றில் இருந்து, வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கயிறு மூலம் மேலே எடுத்து வரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திடீரென்று கிணற்றில் இருந்து மண் எடுக்கும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் ஆலத்தூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: