தேர்தல் களத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும் அனல் பறக்கிறது. பல கட்டணி வைத்து போட்டியிடுவதால் அதிமுக வேட்பாளர்களுடன் எப்போதும் பல கட்சி தொண்டர்கள் கூடவே வருகின்றனர். கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதியிலும் அதிமுக பிரமுகர்களே பணம், சரக்கு, பிரியாணி உள்ளிட்ட அயிட்டங்களை வாங்கித்தர வேண்டியிருக்கிறதாம்.‘‘கூட்டணி கட்சியில தொண்டர்களைத்தான் பார்க்க முடியுது. அந்த கட்சியின் மாவட்ட, நகர செயலாளர்கள் வரவே மாட்டேங்குறாங்க. வந்தா செலவழிக்கணும்னு பார்க்கிறாங்க போல.. எப்ப பார்த்தாலும் நாங்களே கைக்காசை போட்டு செலவழிக்க வேண்டியிருக்கு...’’ என அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தரப்பு புலம்பி தவிக்கிறாங்களாம்.அதுலயும் வெயில் கொளுத்தி எடுப்பதால், கண்டிப்பாக கூலிங் பீர்தான் வேண்டுமென அடம் பிடிக்கிறாங்களாம். கோடைக்காலத்துல கூரை ஏறி கோழி கூட பிடிச்சுடலாம். டாஸ்மாக் கடையில கூலிங் பீர் கிடைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். இதனால் மொத்தமாக ஆர்டர் பண்ணிட்டு டோக்கனை வாங்கி கொடுத்திடுறாங்களாம்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாம்.