அரூர், மார்ச் 26: அரூரில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய விவசாயிகள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாலகபாடி ஓம்சக்தி மாரியம்மன் கோயில் திடலில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைப்பது, விவசாய நிலங்கள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது, தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.