சென்னை: நாடாளுமன்ற தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் எம்.எல்.ஏ நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் வந்திருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தற்போதும் தென்சென்னை எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.