சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளராக எச்.ராஜாவை கட்சி தலைமை அறிவிக்காத நிலையில் நேற்று புதுக்கோட்டையில், நான்தான் பா.ஜ.க. வேட்பாளர் என்று வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணியில் ஆளுங்கட்சி, தேமுதிக, பா.ம.க. உள்ளிட்டவை வேட்பாளர்களை அறிவித்து விட்டன. பா.ஜ.க. சார்பில் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் நேற்று மாலைதான் அறிவித்தனர். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காலையில் நடைபெற்றது. இதில், திருச்சி அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டார். பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் கலந்து கொண்டார். ``சிவகங்கை தொகுதியில் நான்தான் பா.ஜ.க. வேட்பாளர்; நான் வெற்றி பெற்றால் மக்கள் ராஜாவாக இருப்பார்கள் என்றும், இதுவரையில் சிதம்பரம் ராஜாவாக இருந்தார் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.