திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் சண்முகபுரத்தில் வசித்து வருபவர் நவீனா (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில், இவரது வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே எழுந்துவந்து கதவை திறந்தபோது திடீரென வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி நவீனாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் நவீனா பயந்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.