இந்த நிலையில், ராஜீவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜீவ் கடந்த 30ம் தேதி எலி மருந்தை மகள் மற்றும் மனைவிக்கு கொடுத்து அவரும் தின்று குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இதையறிந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை வின்சிலின் இறந்தது. இந்தநிலையில் சிச்சை பெற்று வந்த தாய் விஜியும் நேற்று இரவில் இறந்தார். ராஜீவ் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.