தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார் டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதியுங்கள் : ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை: டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடைவிதிக்க கோரி ஐகோர்ட்  கிளையில் வக்கீல் முறையீடு செய்தார். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு வக்கீல் கண்ணன் செய்த முறையீடு விவரம்: தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் இரண்டு வருட பணி நீட்டிப்பில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஐகோர்ட்டிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, இவர் மக்களவை தேர்தலின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதுடன், தேர்தல் நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்க மாட்டார். இதனால் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே மக்களவை தேர்தலில் தமிழக டிஜிபியாக அவர் செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் நீதிபதிகளிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் டிஜிபி விவகாரம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால், நாளை (இன்று) விசாரிப்பதாக  அறிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: